
| பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில் முத்திக்கு மூலமது. | 91 |
| பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவ சிந்தையால். | 92 |
| அன்பா லழுது மலறியு மாள்வானை யென்புருகி யுள்ளே நினை. | 93 |
| பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து நேசத்தா லீசனைத் தேடு. | 94 |
| கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில் உண்ணுமே யீச னொளி. | 95 |
| நல்லானப் பூசித்து நாதனென வுருகில் நில்லதோ வீச னிலை. | 96 |
| அடியார்க் கடியராயன் புருகித் தம்முள் படியொன்றிப் பார்த்துக் கொளல். | 97 |
| ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும் நேசத்தால் நீ நினைந்துகொள | 98 |
| மெய்ம்மயிர் கூரவிருப்புற்று வேர்த்தெழுந்து பொய்ம்மையி லீசனைப் போற்று. | 99 |
| செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே அறிந்தரனை யாய்ந்து கொளல். | 100 |
