Ads 468x60px

ஞானம் பிரியாமை - ஞானக் குறள்

பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம்.
271

சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு.
272

வெளியில் விளைந்த விளைவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும்.
273

மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை.
274

குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு.
275

சுந்திரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம்.
276

தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.
277

ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை.
278

அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர்.
279

இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத் தனன்குரு பார்.
280