
| பிறந்திட மாலிடம் பேரா திருப்பின் இறந்திடம் வன்னி யிடம். | 271 |
| சாகா திருந்த தலமே மவுனமது ஏகாந்த மாக விரு. | 272 |
| வெளியில் விளைந்த விளைவின் கனிதான் ஒளியி லொளியா யுறும். | 273 |
| மறவா நினையா மவுனத் திருக்கில் பிறவா ரிறவார் பினை. | 274 |
| குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங் கிருபோது நீங்கா திரு. | 275 |
| சுந்திரச் சோதி துலங்கு மிடமது மந்திரச் சக்கரமு மாம். | 276 |
| தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது பாராப் பராபரம் பார். | 277 |
| ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன் நீரொளி மீது நிலை. | 278 |
| அந்தமு மாதியு மில்லா வரும்பொருள் சுந்தர ஞானச் சுடர். | 279 |
| இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து பதிவைத் தனன்குரு பார். | 280 |
