
| செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ் சொல்லு மவுனத் தொழில். | 281 |
| பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து துஞ்சாது ஞானச் சுடர். | 282 |
| இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல் நமக்குட் சிவன்செயல் நாடு. | 283 |
| குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில் செவித்துப் பெறுவ தெவன். | 284 |
| காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம் நாலா நிலையென நாடு. | 285 |
| மூல நிலமிசை மூன்றா நிலத்தினில் ஆல மருந்துஞ் சிவம். | 286 |
| எழுஞ்சுட ருச்சியின் மேன்மனம் வைக்கத் தொழிலொன் றிலாத சுடர். | 287 |
| அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்துப் படைத்தவன் தன்னையே பார். | 288 |
| அறுபதொ டாறு வருட மிதனை உறுதிய தாக யுணர். | 289 |
| அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில் இட்ட மிதனைத் தெளி. | 290 |
