
2மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில் கையகத்தி னெல்லிக் கனி. | 221 |
2கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில் உரையற் றிருப்ப துணர்வு. | 222 |
2உண்டு பசிதீர்ந் தார்போ லுடம்பெல்லாஅங் கண்டுகொள் காதல் மிகும். | 223 |
2உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு நரைதிரை யில்லை நமன். | 224 |
2தோன்றாத தூயவொளி தோன்றியக்கா லுன்னைத் தோன்றாமற் காப்ப தறிவு. | 225 |
2வாக்கு மனமு மிறந்த பொருள்காணில் ஆக்கைக் கழிவில்லை யாம். | 226 |
2கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால் உன்னகத்தே நின்ற வொளி. | 227 |
2 ஆநந்த மான வருளை யறிந்தபின் தானந்த மாகு மவர்க்கு. | 228 |
2மறவாமற் காணும் வகையுணர் வாருக் கிறவா திருக்கலு மாம். | 229 |
விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன் உண்ணிறைந்து நின்ற வொளி. | 230 |