
தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில் கூறிய பல்குணமு மாம். | 121 |
உண்டில்லை யென்று முணர்வை யறிந்தக்கால் கண்டில்லை யாகுஞ் சிவம். | 122 |
ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம் ஒருவனே பல்குணமு மாம். | 123 |
எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த பல்லோர்க்கு முண்டோ பவம். | 124 |
ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும் ஆயுங்கா லொன்றே சிவம். | 125 |
ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந் தேவான தென்றே தெளி. | 126 |
தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென் செம்மையா லீசன் றிறம். | 127 |
எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவார்கள் நல்லுலக நாத னடி. | 128 |
உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன் நிலவுபோ னிற்கும் நிறைந்து. | 129 |
உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன் அலகிறந்த வாதியே யாம். | 130 |