
| கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப் பிண்டமு மூழி பிரியா. | 301 |
| வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத் தள்ளுமின் கால சரம். | 302 |
| செவ்வாய் சனிநா யிறுவல மாகவே கொள்ளிலிவ் வாறிடரு மில். | 303 |
| வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம் வளர்பிறை யென்றே மதி. | 304 |
| வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு செலுத்துபே ராது செயல். | 305 |
| இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு தயங்குறல் நாடிக்குட் டான். | 306 |
| அரசறி யாம லவன்பே ருறைந்துத் தரைதனை யாண்ட சமன். | 307 |
| கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச் செல்லாத தென்ன செயல். | 308 |
| திருவருட் பாலைத் தெரிந்து தெளியில் குருவிருப் பாமென்று கொள். | 309 |
| கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற நிற்கில் பரமவை வீடு. | 310 |
