
அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில் விண்ணோர்க்கு வேந்தனு மாம். | 61 |
ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில் பூரண மாகும் பொலிந்து. | 62 |
ஓங்காரமான கலசத்தமிர் துண்ணில் போங்காலமில்லை புரிந்து. | 63 |
ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில் போனகம் வேண்டாமற் போம். | 64 |
ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில் கூறும் பிறப்பறுக்க லாம். | 65 |
ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில் ஆன சிவ யோகி யாம். | 66 |
மேலையமிர்தை விளங்காமற்றா னுண்ணில் காலனை வஞ்சிக்க லாம். | 67 |
காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில் ஞான மதுவா நயந்து. | 68 |
எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில் தொல்லை முதலொளியே யாம். | 69 |
நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்துண்ணில் உலாவலா மந்தரத்தின் மேல். | 70 |