
மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி அண்டரனை யர்ச்சிக்கு மாறு. | 71 |
ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து பூசனைசெய் துள்ளே புணர். | 72 |
உள்ளமே பீடமுணர்வே சிவலிங்கத் தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு. | 73 |
ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவைப் பேதமற வர்ச்சிக்கு மாறு. | 74 |
பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப் பாரித்தங் கர்ச்சிக்கு மாறு. | 75 |
விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு துளக்கற வர்ச்சிக்கு மாறு. | 76 |
பிண்டதினுள்ளே பேரா திறைவனைக் கண்டுதா னர்ச்சிக்கு மாறு. | 77 |
மந்திரங்களெல்லா மயங்காம லுண்ணினைந்து முந்தரனை யர்ச்சிக்கு மாறு. | 78 |
பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந் தாராதனை செய்யு மாறு. | 79 |
உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங் கொண் சுடரை மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. | 80 |