Ads 468x60px

ஞான நிலை - ஞானக் குறள்

தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை.
261

தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே
நிற்பது பேரொளி நில்.
262

ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பிணை.
263

கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது.
264

மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு.
265

காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான்.
266

பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம்.
267

நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக் கிலொன் றேயுள.
268

பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தி யாம்.

269

அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார்.

270