Ads 468x60px

கண்ணாடி - ஞானக் குறள்

3கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி.
231

3அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை உடம்பு.
232

3நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.
233

3கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு.
234

3சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு.
235

3ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன்.
236

3வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு.
237

3 நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்
முற்று மழியா துடம்பு.
238

3மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு.
239

சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு.

240