Ads 468x60px

மோட்சம் செல்லும் வழி - ஞானக் குறள்

ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்.
1

பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு.
2

ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற
மாசை படுத்து மளறு.
3

தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு
முருவத்தா லாய பயன்.
4

நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிறண்டொன் றுவிண்.
5

மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து.
6

மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு.
7

தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு.
8

மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு.
9

இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து.
10