
ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத் தோதிய நூலின் பயன். | 1 |
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந் தரமாறிற் றோன்றும் பிறப்பு. | 2 |
ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற மாசை படுத்து மளறு. | 3 |
தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு முருவத்தா லாய பயன். | 4 |
நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே யுலவை யிறண்டொன் றுவிண். | 5 |
மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து. | 6 |
மாலய னங்கி யிரவிமதி யுமையோ டேலும் திகழ்சத்தி யாறு. | 7 |
தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு சுக்கிலந் தாதுக்க ளேழு. | 8 |
மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. | 9 |
இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி னவையெல்லா மானது விந்து. | 10 |