Ads 468x60px

நாடி தாரணை - ஞானக் குறள்

3எழுபத் தீராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல்.
31

3நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா
முரம்பெறு நாடியொன் றுண்டு.
32

3உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து.
33

3காலொடு கையி னடுவிடத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து.
34

3ஆதித்தன்றன் கதிர்போல வந்நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு.
35

3மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு.
36

3உந்திமுதலாகி யோங்காரத்துட் பொருளாய்
நின்றது நாடி நிலை.
37

3 நாடிகளூடு போய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து.
38

3நாடி வழக்கமறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு.
39

அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம்.
40