Ads 468x60px

துரிய தரிசனம் - ஞானக் குறள்

வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள.
291

சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமி னீது பயன்.
292

மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.
293

மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.
294

தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான்.
295

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம்.
296

அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான்.
297

அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத் திலுமதுவே பேசு.

298

ஏறு மதிய மிறங்கிடி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள்.
299

உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம்.

300