Ads 468x60px

உயர்ஞான தரிசனம் - ஞானக் குறள்

கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா.
301

வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம்.
302

செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில்.
303

வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி.
304

வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துபே ராது செயல்.
305

இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான்.
306

அரசறி யாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன்.
307

கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல். 
308

திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள். 
309

கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு. 
310